மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

மதுரையில் நடைபெற்ற மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் பரிசு வழங்கினார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி(இடைநிலை) சார்பில் அரசு பள்ளிமாணவர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் விளையாட்டுப் போட்டிகள் மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகளுக்கு குழு மற்றும் தனி நபர் விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன.

இதில் வாலிபால், கால்பந்து, கோ-கோ, இறகுப் பந்து, கபடி, கேரம், சதுரங்கம், தனி நபர் தடகளப் போட்டிகள் 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., தொடர் ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், வட்டெறிதல், ஈட்டிஎறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் நடந்தது.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி யின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நீ.திருஞானம் வரவேற்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

சினிமா

22 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

59 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்