முறைகேடு புகார்களை முன்னிட்டு, வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் மூன்று நாட்களுக்கு முன்னதாக தேர்வு மைய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''2018-2019 ஆம் ஆண்டிற்கு வட்டாரக் கல்வி அலுவலருக்கான கணினி வழித் தேர்வு 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 தேதிகளில் (காலை/மதியம்) நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதிச் சீட்டை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி http://www.trb.tn.nic.in/ –ல் தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து 07.02.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்தின் மாவட்டம் / நகரத்தை மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது. தற்போது தேர்வர்கள் தங்களது தேர்வு நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தேர்வு மையத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளும் வகையில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முகவரியினைப் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வு மையம் குறிப்பிட்டுள்ள அனுமதிச் சீட்டைக் கண்டிப்பாகப் பதிவிறக்கம் செய்து தேர்வு நாளன்று தேர்வு எழுதும் மையத்திற்கு எடுத்துச் சென்று உரிய அறிவுரையைப் பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது.
தேர்வு தேதி - அனுமதிச் சீட்டு வெளியிடும் நாள்
14.02.2020 – 10.02.2020
15.02.2020 – 11.02.2020
16.02.2020 – 12.02.2020'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: http://www.trb.tn.nic.in/
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago