மாநில கபடி போட்டிக்கு தாசர ஹள்ளி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

By செய்திப்பிரிவு

மாநில அளவிலான கபடி போட்டிக்கு தருமபுரி மாவட்டம் தாசர ஹள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் தாசர ஹள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளிசெயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தருமபுரிமாவட்ட அளவில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்றனர்.

இதன்மூலம் இந்த அணியினர் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட போட்டியில் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஜெயராஜையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்