5,8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து: ஆசிரியர் சங்கம் நன்றி

By செய்திப்பிரிவு

5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்ததற்காக தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்அறிக்கையில் கூறியிருப்பதாவது:

5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகள்தான் அரசுபள்ளிகள் மாநகராட்சிப் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.

குழந்தைகள் பள்ளிக்கு வரவழைப்பதே பல போராட்டங்கள் நடுவில் நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுத்தேர்வென்றால் அரசுப்பள்ளிகள்கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும் அபாயத்துக்கு தள்ளப்படும். பொதுத்தேர்வென்று பள்ளியினைவிட்டு வேறுபள்ளிக்கு சென்று எழுதச்சொல்வது பயத்தை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

இத்தகைய சூழலில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பொதுத்தேர்வை ரத்துசெய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்