இந்தியாவில் உள்ள 6 கோடி விவ சாயிகளுக்கு நிவாரண நிதியாக வங்கி கணக்கு மூலம் ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
3-வது உலகளாவிய உருளைக் கிழங்கு மாநாட்டின் தொடக்கவிழா குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கியது. 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், தொடக்க விழாவில்காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
2022-ம் ஆண்டுக்குள் இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதன்விளைவாகவும், மத்திய அரசின் கொள்கை மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பினாலும் சில தானிய வகைகள், உணவு பொருட்கள் உற்பத்தியில் உலக அளவில் முதல் 3 முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மாத தொடக்கத்தில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, சுமார் 6 கோடி விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.12 ஆயிரம் கோடி வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்றுமத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago