தனியார் பள்ளிகளில் நடைபெறும் செய்முறைத் தேர்வுப் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு கூறியதாவது:
10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளுக்கு குலுக்கல் முறையை ரத்து செய்து, கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலம் தேர்வுப் பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்யக் கூடாது. மூத்த முதுநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும்.
அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களையும் அறை கண்காணிப்பாளர் பணிக்கு பயன்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இதற்கு முன் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தனியார் பள்ளி செய்முறைத் தேர்வுப் பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசுப் பள்ளி செய்முறைத் தேர்வுகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் நடைபெறும் செய்முறைத் தேர்வுப் பணிகளுக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், அரசுப்பள்ளிகளில் நடைபெறும் செய்முறைத்தேர்வுகளுக்கு, அரசுப் பள்ளி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
இந்தாண்டு செய்முறைத் தேர்வுப்பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்களையே முழுமையாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
41 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago