தேசிய கார்ப்பந்துப் போட்டியில் விளையாடுவதற்காக தமிழக அணிக்கு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாட்டாபாரா மாவட்டத்தில் 17 வயதுகுட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தேசிய கார்ப்பந்து போட்டி ஜனவரி 22-ம் தேதி முதல் 25 வரை நடைபெறுகிறது.
ஆசிரியர்கள் பாராட்டு
இதில் தமிழக அணி சார்பில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அங்குச்சாமி, கவுதம் ஆகியோர் தேர்வு செய்யபட்டுள்ளனர்.
இந்த மாணவர்களை தலைமை ஆசிரியை பிராக்ரன்ஸ் லதா, உதவி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சக்தி குமார், உடற்கல்வி இயக்குநர் ஞான சேகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் காட்வின், முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். தேசிய போட்டியில் பங்கேற்க இருக்கும் இரு மாணவர்களுக்கு சக மாணவர்கள் வாழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
9 mins ago
தமிழகம்
40 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago