கால்நடை வளர்ப்புத் துறையில் கடந்த ஆண்டை விட இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வேளாண்மைத் துறை அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
கால்நடை வளர்ப்பில் உள்ள இறக்குமதி விதிமுறைகளை இந்தியா எளிதாக்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் கால்நடை வளர்ப்புத் துறை கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. கால் நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துக்காக தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சகங்கள் உணவு மற்றும் விவசாய பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வழி காட்டியாக செயல்படுகின்றன.
2019-ம் ஆண்டு, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்திய கால்நடை வளர்ப்புத்துறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago