யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: சென்னை அண்ணா பல்கலையில் இன்று நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் இன்று (டிச.15) நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் வெற்றிபெற வேண்டு மென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படை கல்வித் தகுதி என்ன? எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்? அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.

அந்த தயக்கத்தைப் போக் கும் வகையிலும், இந்தத் தேர்வு களுக்குப் படிப்பதற்கான தெளி வைத்தரும் நோக்கிலும் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயா ராகும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவே கானந்தா அரங்கில் இன்று காலை நடைபெற உள்ளது. இதில் சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் உ.சகாயம், பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் எஸ்.டி. வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்ற இருக் கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

இதில் பங்கேற்கும் அனை வருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங் கப்படும். இதில் பங்கேற்க விரும்பு வோர் 9773001174 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயரைக் குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி, பதிவுசெய்து கொள்ள லாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்