‘சிறப்பு பள்ளிகளில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க கூடாது’

By செய்திப்பிரிவு

பார்வை திறன் குறைபாடு, செவித்திறன் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 20 அரசு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதால் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத் தலைவர் அரங்கராஜா கூறியதாவது: சிறப்புப் பள்ளிகளில் படப்பிடிப்புகள் நடக்கும்போது, படக்குழுவினர் உபயோகமற்ற பொருட்களை அப்படியே விட்டுச் செல்கின்றனர்.

குப்பைகளை அதிகம் போடுகின்றனர். இதனால் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சனிக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பு நடக்கும்போது பணிக்கு வரும் ஆசிரியர்களும், விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவ - மாணவியரும் பாதிக்கப்படுகின்றனர்.

மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர் மனதளவிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே, சிறப்புப் பள்ளிகளிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

12 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்