அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் மீது கல்வித் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

அங்கீகாரம் இல்லாத தனியார் மழலையர் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் என 15 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

தனியார் பள்ளி நிர்வாகங் கள் தமிழக அரசின் முறையான அங்கீகாரம் பெற்று இயங்க வேண்டும். ஆனால், ஆயிரத் துக்கும் அதிகமான பிளே ஸ்கூல் வகையான மழலையர் பள்ளிகள் முறையான அங்கீ காரம் இல்லாமல் செயல் படுவது கல்வித் துறையின் கவனத்துக் கொண்டு வரப்பட்டது.

மேலும், அந்தப் பள்ளி களில் போதுமான உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கீகார மில்லாத தனியார் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழலையர் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது அங்கீ காரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

இதுகுறித்த ஆய்வு விவரங் களை அறிக்கையாக தயாரித்து துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்