அரசு பள்ளியில் படித்துதான் மருத்துவராகி, ஐபிஎஸ் அதிகாரி ஆனேன் என அரசு பள்ளி விழாவில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ.வெ.அருண் சக்திகுமார் கூறினார்.
புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்திய அரசியல் சாசன தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை கி.ராணி தலைமையில் நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை எஸ்பி அருண் சக்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி அவர் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக உயர முடியும். நான்கூட அரசு பள்ளியில் படித்து தான் மருத்துவராகி, பிறகு ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்து உள்ளேன்.
பாடங்களை முறையாகக் கற்பதுடன், பொது அறிவுத் திறனையும் இப்போதிலிருந்தே வளர்த்துக் கொண்டால்
போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற்று எதிர்காலத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வரலாம் என்றார். ஆசிரியர் ஹரிராம் வரவேற்றார். ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
தொழில்நுட்பம்
46 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
3 hours ago