மத்திய பிரதேசத்தில் ட்விட்டரில் புகார்: 2 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவாவை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் துபே.

இவர் தனது பகுதியில் நீர்வளத் துறை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம்(ஆர்டிஐ) மூலம் செப்டம்பரில் விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக காகித கட்டணம் ரூ.2 வேண்டும் என்று துறை சார்பாக கேட்கப்பட்டது. இதனால், நேரடியாக அலுவலகம் சென்று துபே கொடுக்க முயன்றபோது, அதிகாரிகள் அதை வாங்க மறுத்தனர்.

இதுகுறித்து மாநில தகவல் ஆணையர் ராகுல் சிங்க்கு ட்விட்டர் மூலம் துபே புகார் அளித்தார். இதனால், சம்பந்தப்பட்ட 2 அதிகாரிகளும், டிசம்பர் 23-ம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

இந்தியா

40 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்