சென்னை ஐஐடியில் வேலைக்குத் தேர்வான 158 மாணவர்கள்!

By செய்திப்பிரிவு

சென்னை ஐஐடியில் கடைசி செமஸ்டர் தொடங்குவதற்குள்ளாகவே 158 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் நவம்பர் 22-ம் தேதி வரை 158 மாணவர்கள் வேலைக்குத் தேர்வாகியுள்ளனர். கடைசி செமஸ்டர் தொடங்குவதற்குள்ளாகவே (pre—placement offers) அவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்த மாணவர்களில் பெரும்பாலானோரை நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக்கொண்டதே இதற்கான முக்கியக் காரணம். 2019- 20 ஆம் கல்வியாண்டில் 1,334 மாணவர்கள் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துள்ளனர். முதல்கட்ட வேலைவாய்ப்பு முகாமில் 170 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

54 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலைவாய்ப்பை வழங்க உள்ளன. இந்த நிகழ்வில் 35 சர்வதேச வேலைவாய்ப்பு உட்பட 322 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன''.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

3 mins ago

க்ரைம்

38 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்