கற்றல் குறைபாடு உடைய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

By செய்திப்பிரிவு

பள்ளிகளில், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களில், கற்றல் குறைபாடு உடையவர்களுக்கு வேலை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:6-14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களை இனம் கண்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும், அதன்படி 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 5.20 மணி வரையிலும் வகுப்புகள் நடத்தி, தினந்தோறும் 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து, மாதிரி தேர்வுகள் நடத்த வேண்டும்.

விடைத்தாளை இரு நாட்களுக்குள் மதிப்பீடு செய்து வழங்க வேண்டும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணை, பதிவேட்டில் பதிவு செய்து, கையொப்பமிடுவதுடன், தலைமை ஆசிரியரிடமும் கையொப்பம் பெற வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில் ஆசிரியர் விடுமுறை எடுக்க நேரிடின், வேறொரு ஆசிரியர் மூலம் இப்பணியை முடிக்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பின் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 mins ago

இந்தியா

12 mins ago

விளையாட்டு

51 mins ago

சினிமா

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்