சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள சிறப்பு தபால்தலை மையத்தில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ‘தபால்தலைகள் மீது குழந்தைகளுக்கு உள்ள ஈடுபாடு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது.
இதில் தொடக்கப் பள்ளிகள் பிரி வில் சான் அகாடமி பள்ளி மாணவர் கார்த்திக் சிவகுமார் முதல் பரிசை யும் புதுப்பேட்டை ஆர்பிஏஎன்சி பள்ளி மாணவி பி.ஹர்சினி 2-ம் பரிசையும் புதுவண்ணாரப்பேட்டை ஸ்டெல்லா மேரீஸ் பள்ளி மாணவி வி.நேத்ரா 3-ம் பரிசையும் பெற்றனர்.
உயர் நிலைப் பள்ளிகள் பிரி வில் நங்கநல்லூர் செல்லம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஹரிணி நாராயணன் முதல் பரிசை யும் வன்னிய தேனாம்பேட்டை சென்னை உயர் நிலைப் பள்ளி மாணவர் பி.யஷ்வந்த் 2-ம் பரிசையும் செம்பியம் கேஆர்எம் பொதுப் பள்ளி மாணவி கே.ஹரிணி 3-ம் பரிசையும் வென்றனர்.
சென்னை நகர மண்டல அஞ் சல் அலுவலகத்தின் உதவி இயக்கு நர் ஆர்.பாலச்சந்தர், அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அதிகாரி வீ.கனகராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். அஞ்சல்துறை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில் இத்தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
19 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago