தஞ்சாவூர்
சீனாவின் ஷாங்காய் நகரில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேசத் திறன் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தகுதிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நவம்பர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட திறன்பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் லெ.ஜெயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்பதற்கான, தொடக்க நிலையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் வாயிலாக விண்ணபிக்கலாம். 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்டஅளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
விண்ணப்பதாரர் 1.1.1999 அன்று அல்லது அதற்குப் பின்னர் பிறந்திருக்க வேண்டும். குறப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 1.1.1996 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர். பள்ளி கல்லூரி மாணவர்கள்ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி தகுதி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சிநிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும்படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலையில் பணியில் உள்ளர்கள், குறுகிய காலதொழிற் பயிற்சி பெற்றவர்கள் ஆகிய அனைவரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய,‘உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், தஞ்சாவூர்' என்ற முகவரியை அல்லது 04362 278222, 94436 78906 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
சினிமா
11 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
15 mins ago
சினிமா
33 mins ago
இந்தியா
47 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago