புதுடெல்லி
அரசு திறன் மற்றும் தொழில் முனைவோர் பல்கலைக்கழகம் டெல்லியில் அமையவுள்ளதாக மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “மாணவர்களின் திறனை வளர்த்து, தொழில்முனை வோராக உருவாக்க திறன் மற்றும் தொழில்முனைவோர் பல்கலைக்கழகம் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான மசோதாவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளோம். பின்னர், அதற்கான ஒப்புதலை பெற, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த பல்கலைக்கழகம் பல்வேறு துறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை நிச்சயம் ஏற்படுத்தும். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து பல்கலை. செயல்படும். 50,000 மாணவர்கள் இந்த பல்கலையில் படிக்க ஏற்பாடு செய்யப்படும் ” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
8 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
16 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
22 mins ago
ஆன்மிகம்
32 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago