மதுரை
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மதுரை, மேலூர் கல்வி மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு எழுதிய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், மதுரை மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மீனாவதி உட்பட தலைமை ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பள்ளியிலும் தேர்ச்சி விகிதம், அதிக மதிப்பெண், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள், குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் கூடுதல் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் குறைவு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டது.
கல்வி அதிகாரி அறிவுரை மேலும் அடுத்து நடைபெற உள்ள தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவது, அதற்காக ஆசிரியர்கள் மேற் கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும் முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் அறிவுரை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago