தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை ஒத்துழைப்பு: பிரான்ஸ் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

பாரிஸ்

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இந்தியாவுடன் இணைந்து செயலாற்ற பிரான்ஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பயணம் மேற்கொண்டார். இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, முதல் ரஃபேல் போர் விமானத்தை பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத், அந்த விமானத்தில் பயணம் செய்து பார்த்தார். இந்நிலையில், ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளாரன்ஸ் பார்லேவுடன் நடத்திய ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

மேலும், இந்தியா - பிரான்ஸ் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்புரிவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்