கீழடியில் 6-வது கட்டமாக அகழாய்வு

By செய்திப்பிரிவு

திருப்புவனம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை கடந்த 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. இதுவரை 5 கட்ட அகழாய்வு நடந்துள்ளது.

இதில், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருட்கள், செப்பு, வெள்ளி காசுகள், தண்ணீர் குவளை, சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து 6-வது கட்ட அகழாய்வு கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் விரைவில் தொடங்குகிறது. 4-வது கட்ட அகழாய்வின் முடிவின்படி, கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.

இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் பொது மக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் இடையே அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்