கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ளது. இதனால் வனத் துறையினரிடம் அனுமதி பெற்ற பின்பே சுற்றுலாப் பயணிகள் ஏரிக்குச் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ன்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம். இந்நிலையில் நேற்று காலை முதல் பேரிஜம் ஏரிப் பகுதியில் யானைகள் சுற்றித் திரிகின்றன.

இதனால் பாதுகாப்புக் கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், யானைகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானைகள் ஏரிப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்ததும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்