போலி பத்திரப்பதிவு: : கோவை, ஈரோடு பதிவாளர் சஸ்பெண்ட் :

By செய்திப்பிரிவு

போலியான பத்திரப்பதிவுகள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், கோவை, ஈரோடு மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், பத்திரப்பதிவுத்துறையில் முறைகேடுகளை களையும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக முறைகேடாக, போலியாக பத்திரப்பதிவுகள் மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முறைகேடாக, உரிய விதிகளை பின்பற்றாமல் அதிகளவில் போலிப்பத்திரப்பதிவுகள் நடைபெற்றிருப்பது குறித்த புகார்கள் வந்த நிலையில், ஈரோடு மாவட்ட பதிவாளர் ஆர்.பெரியசாமி மற்றும் கோவை மாவட்ட பதிவாளர் எம்.செல்வகுமார் ஆகியோர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட இருவரும் உரிய அனுமதியின்றி அந்தந்த மாவட்ட தலைமையிடத்தை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்