தமிழக மீனவர்களின் : வலையை பறித்த கடல் கொள்ளையர் :

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருட்செல்வன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில்அதே பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, 3 பெரிய ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் 10 பேர், மீனவர்களின் ஃபைபர் படகை வழிமறித்து கத்தியைகாட்டி மிரட்டி 10 கட்டு வலைகள், ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, செல்போன், டார்ச்லைட், சிக்னல் லைட் உட்பட ரூ.3 லட்சம் மதிப்புடைய பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.

நேற்று காலை ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்த 4 மீனவர்களும், இதுகுறித்து கிராம கடலோர காவல் குழும போலீஸில் புகார் அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்