தமிழகத்தில் புதிதாக 1,997பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரித்து வருகிறது. தமிழக எல்லையோர பகுதிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் கரோனா பரிசோதனைகளும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 1,997 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று 1,164 ஆண்கள், 833 பெண்கள் என மொத்தம் 1,997 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 220, சென்னையில் 196 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்புஎண்ணிக்கை 25 லட்சத்து 69,398ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டுமே 5 லட்சத்து39,105 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை சென்னையில் 5 லட்சத்து 28,891 பேர் உட்பட தமிழகம்முழுவதும் மொத்தம் 25 லட்சத்து15,030 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று செங்கல்பட்டில் 98, சென்னையில் 146, கோயம்புத்தூரில் 187 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,943 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
உயிரிழப்பு 34,230 ஆக உயர்வு
கரோனாவால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்றுஒரே நாளில் 33 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,230 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 8,327 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 3 கோடியே 73 லட்சத்து 34,452 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 58,149 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
6 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
21 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago