தமிழகத்தில் புதிதாக 1,949 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 1,949 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முதியோர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,096, பெண்கள் 853 என மொத்தம் 1,949 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 226, சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 67,401- ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 25 லட்சத்து 13,087 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,011 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 20,117 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியோர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,197-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,323 பேர் இறந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

சினிமா

39 mins ago

க்ரைம்

33 mins ago

தமிழகம்

24 mins ago

சினிமா

48 mins ago

இந்தியா

8 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்