தமிழ்நாட்டில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மாநில பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்விஇயக்குநரும், கற்போம் எழுதுவோம் திட்ட இயக்குநருமான வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 3 லட்சத்து 10,000 கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் வகையில், கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற வயது வந்தோர் கல்வித் திட்டம், ரூ.7 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகங்களில் 15,581 கற்போர் எழுத்தறிவு மையங்களை அமைத்து, அம்மையங்களில் தன்னார்வல ஆசிரியர்களின் உதவியுடன் கற்போர்களுக்கு 120 மணிநேரக் கற்பித்தல் மற்றும் கற்றல்செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் கற்போர்களுக்கான கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தில் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு இறுதி மதிப்பீட்டு முகாம், ஜூலை 29 முதல் 31-ம் தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த இறுதி மதிப்பீட்டு முகாமில் 3 லட்சத்து 21,539 கற்போர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலேயே, கற்போம் எழுதுவோம் இயக்கம் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இத்திட்டத்தின் மொத்த இலக்கான 3 லட்சத்து10,000 என்பதை விஞ்சி 3 லட்சத்து 21,539 கற்போர் இத்திட்டத்தில் பங்கேற்றுப் பயனடைந்துள்ளனர்.
மேலும், பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், வயதில் மிகவும் முதியோர் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இக்கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
43 mins ago
விளையாட்டு
34 mins ago
தமிழகம்
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago