நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது - அனைத்து போலீஸாருக்கும் வார ஓய்வு : தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸாருக்கும் வார ஓய்வுஅளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து அரசுஊழியர்களுக்கும் வார ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்,காவல் துறையினருக்கு இந்தவிடுப்பு வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், காவல் துறையினருக்கு வார ஓய்வு அளித்துடிஜிபி சைலேந்திரபாபு நேற்றுஉத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காவலர்கள் தங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ள ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் வாராந்திர ஓய்வு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தில்பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

போலீஸாரின் பிறந்தநாள், திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக, அந்த நாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். காவல் துறை சார்பில் பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்துச்செய்தி, மாவட்ட, மாநகர காவல்கட்டுப்பாட்டு அறையின் வானொலிமூலமாக சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதை தவறாமல் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காவல் துறையினர் மற்றும்அவர்களது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

கல்வி

4 mins ago

தமிழகம்

6 mins ago

இணைப்பிதழ்கள்

30 mins ago

தமிழகம்

8 mins ago

இந்தியா

50 mins ago

சுற்றுலா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்