3 கவுன்சிலர்களோடு - அதிமுக ஒன்றியத் தலைவர் கட்சி மாறியதால் திமுக வசமானது சிவகங்கை ஒன்றியம் :

By செய்திப்பிரிவு

3 கவுன்சிலர்களோடு அதிமுக ஒன்றியத் தலைவர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து சிவகங்கை ஒன்றியம் திமுக வசமானது.

சிவகங்கை ஒன்றியத்தில் 18வார்டுகள் உள்ளன. இதில் அதிமுகவில் 8 பேர், பாஜக, தேமுதிகவில் தலா ஒருவர் என 10 கவுன்சிலர்கள் அதிமுக தரப்புக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அதிமுகவைச் சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் தலைவராகவும், கேசவன் துணைத் தலைவராகவும் இருந்தனர்.

திமுக தரப்பில் திமுகவில் 6 பேர், காங்கிரஸ் ஒருவர் என 7 கவுன்சிலர்கள் இருந்தனர். மேலும் அமமுக கவுன்சிலரும் திமுகவுக்கு ஆதரவாக இருந்தார். இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு அமமுக கவுன்சிலர் பத்மாவதி திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவின் பலம் 8 ஆனது. மேலும் அதிமுகவைச் சேர்ந்த சிலரும் திமுகவில் இணையத் தயாராக இருந்தனர்.

இதனால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதியஒன்றியத் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், தனது ஆதரவு கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்த வேல்முருகன், லட்சுமி சரவணன், தேமுதிகவைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய 3 கவுன்சிலர்களுடன் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனால் திமுகவின் பலம் 12 ஆக மாறியதால், சிவகங்கை ஒன்றியம் திமுக வசமானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

வலைஞர் பக்கம்

56 mins ago

கல்வி

49 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

52 mins ago

ஓடிடி களம்

59 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்