மின்வாரிய அதிகாரி வீட்டில் - ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில், மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர் மாணிக்கம்(43). இவர், 2019-ல் லஞ்ச வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றவர். துறைரீதியான நடவடிக்கையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி, மாணிக்கம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் மாணிக்கத்துக்கு சொந்தமான வெங்கடேசபுரத்தில் உள்ள வீட்டிலும், வெண்பாவூர் கிராமத்தில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது. இதில், ரூ.2 கோடி மதிப்பிலான சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்களும், வங்கி கணக்கு புத்தகமும் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்