புதிதாக 1,872 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,072 ஆண்கள், 800 பெண்கள் என மொத்தம் 1,872 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 180, சென்னையில் 133 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 43 ஆயிரத்து 40 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை தமிழகம் முழுவதும் 24 லட்சத்து 83 ஆயிரத்து 676 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,475 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 25,526 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்றுஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,838 ஆக உயர்ந்துள்ளது.

அரசு, தனியார் ஆய்வகங்களில் நேற்று மட்டும் 1 லட்சத்து 44 ஆயிரத்து 759 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

16 mins ago

க்ரைம்

22 mins ago

க்ரைம்

31 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்