புதிதாக 2,405 பேருக்கு கரோனா தொற்று :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று புதிதாக ஆண்கள் 1,356, பெண்கள் 1,049 என மொத்தம் 2,405 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 256, சென்னையில் 148 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 28 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 24 லட்சத்து 65 ஆயிரத்து 250 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னையில் 1,633, கோயம்புத்தூரில் 3,453பேர் உட்பட தமிழகம் முழுவதும் 29,950 பேர்சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,606 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 8,279 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 3 கோடியே 42 லட்சத்து 59 ஆயிரத்து 860 பேருக்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 663 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

31 mins ago

விளையாட்டு

33 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்