தமிழகத்தில் புதிதாக - 2,652 பேருக்கு கரோனா தொற்று : முதியவர்கள் உட்பட 36 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,518, பெண்கள் 1,134 என மொத்தம் 2,652 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 21,438ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 24 லட்சத்து 56,165 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3,104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சிகிச்சையில் 31,819 பேர்

தமிழகம் முழுவதும் 31,819 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 6 பேர் இறந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,454 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,262 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

28 mins ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்