கரோனா 2-வது அலையால்கடந்த ஏப்.20-ம் தேதி முதல்சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில்,கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இ-பதிவு முறையை ரத்து செய்தது.
இதையடுத்து கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகியவை திறக்கப்படும் என தோட்டக்கலைத் துறையினர் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று காலை முதல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இவர்களை தோட்டக்கலைத் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா மலர்க் கண்காட்சி நடைபெறாத நிலையில், பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் வெகுவாகக் கண்டு ரசித்தனர்.
அடுத்தக்கட்டமாக தளர்வுகளை அறிவிக்கும் பட்சத்தில் கோக்கர்ஸ் வாக், ஏரியில் படகு சவாரி, குணா குகை, மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களும் படிப்படியாக திறக்கப்படும் வாய்ப்புள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago