தமிழகத்தில் புதிதாக - 15,759 பேருக்கு கரோனா தொற்று : முதியவர்கள் உட்பட 378 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 15,759 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 378 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 8,769, பெண்கள் 6,990 என மொத்தம் 15,759 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 2,056, ஈரோட்டில் 1,365, சென்னையில் 1,094 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 24,597 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 5 லட்சத்து 4,561 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 21 லட்சத்து 20,889பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் கோவையில் 4,612, சென்னையில் 2,377 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 29,243 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

சிகிச்சையில் 1.74 லட்சம் பேர்

கோவையில் 18,600, சென்னையில் 10,842 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 74,802 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 378 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 59 பேர், கோவையில் 31 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 7,720 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5 லட்சத்து 23,123, கோவையில் 1 லட்சத்து 99,660, செங்கல்பட்டில் 1 லட்சத்து 50,061, திருவள்ளூரில் 1 லட்சத்து 6,982 என்றஎண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 271 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 96 லட்சத்து 7,865 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 82,586 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

12 mins ago

உலகம்

33 mins ago

வாழ்வியல்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்