அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வுக்காக தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் சூழல் கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாததால் அவர்களால் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாது. தனியார் பயிற்சி மையங்களில் வசூலிக்கப்படும் அதிக கல்விக் கட்டணத்தை கொடுக்க முடியாது. கிராமங்களில் டாக்டர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தால்தான் அந்த குறையைப் போக்க முடியும். தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது ஏழை மாணவர்கள்அதிக எண்ணிக்கையில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர். ஆனால், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது.
தமிழகத்தில் ஓராண்டில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, கரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தாங்கள் வெளியிட்ட பல அறிவிப்புகள் மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. எனவே, நீட் தேர்வு மட்டுமின்றி அனைத்து தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளையும் நீக்கும் வகையில் ஒருமித்த கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அனைத்து படிப்புகளுக்கும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறி யுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
13 mins ago
உலகம்
36 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
55 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago