ஜூடோ கெபிராஜ் மீதான : பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் :

By செய்திப்பிரிவு

ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதானபாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ஜூடோ பயிற்சிக்காக சென்ற தனக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக, ஜூடோ மாஸ்டர் கெபிராஜ் மீது 26 வயது இளம்பெண் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். புகாரில் உண்மைத் தன்மை இருந்ததையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி இரவு அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கெபிராஜ் மீது பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, இந்தவழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட டிஜிபிஜே.கே.திரிபாதி, ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

12 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்