தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடிவிசாரணை உள்ளிட்ட அன்றாடப்பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ளகுற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறைகிடையாது. இதனால் இங்கு அன்றாட பணிகள் வழக்கம்போல நடந்தன. இதனால் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் பணியாற்றும் குற்றவியல் நடுவர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால்,குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலும் காணொலி காட்சி மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பிலும், தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் ரிமாண்ட் உள்ளிட்ட அவசரப் பணிகள் தவிர்த்து மற்ற அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் உத்தரவிட்டுள்ளார். கீழமை நீதிமன்றங்களில் நேரடிவிசாரணை உள்ளிட்ட மற்ற அன்றாடப் பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால உத்தரவுகள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago