தமிழகத்தில் புதிதாக 29,272 பேருக்கு கரோனா தொற்று : முதியவர்கள் உட்பட 298 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள்16,983, பெண்கள் 12,289 என மொத்தம் 29,272 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 7,466,செங்கல்பட்டில் 2,419, கோவையில் 2,650, திருவள்ளூரில் 1,204, மதுரையில் 1,024 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 3 லட்சத்து 61,652 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 60,150 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 19,182 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 37,713பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 62,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஒரே நாளில் நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 298 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும்92 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் 267 அரசு மற்றும்தனியார் ஆய்வகங்களில் இதுவரை 2 கோடியே 43 லட்சத்து 10,931 பரிசோதனைகள் நடந்துள்ளன. நேற்று மட்டும் 1 லட்சத்து 56,111 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியருக்கு கரோனா

ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த இவர் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகள்:

நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எங்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவசியம். ரத்த ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்துக்கு அதிகமாக இருப்பவர்கள் குறைந்த பாதிப்புடையவர்கள். 90 முதல் 94 சதவீதம் வரைஉள்ளவர்கள் மிதமான பாதிப்புடையவர்கள். 90 சதவீதத்துக்கும் கீழ்உள்ளவர்களை தீவிர பாதிப்புக்குள்ளானவர்களாக கருத வேண்டும். அவர்களது நாடித் துடிப்பு, ரத்தசர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவற்றையும் பரிசோதித்து நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பிடுதல் அவசியம்.

96 சதவீத ரத்த ஆக்சிஜன் அளவுடன் குறைந்த பாதிப்புடன் உள்ள கரோனா நோயாளிகள் வேறு எந்த இணை நோய்க்கும் உள்ளாகாமல் இருக்கும்பட்சத்தில், அவர்களது உடல்நல தகுதியை பரிசோதித்து வீட்டு கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தலாம். அவர்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்புஇருந்தால் கரோனா கண்காணிப்புமையத்துக்குச் செல்ல பரிந்துரைக்க வேண்டும். மிதமானமற்றும் தீவிரமான பாதிப்புடையவர்கள், அதனுடன் இணை நோய்களையும் கொண்டிருப்பவர்களை கட்டாயம் கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும். அதேவேளையில், குறைந்த பாதிப்பு மற்றும் அறிகுறிகளே இல்லாத கரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்