கரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. தனியார்மருத்துவமனைகளை கட்டுப்படுத்த உத்தரபிரதேசம், டெல்லியில் இருப்பதுபோல் தமிழகத்தில் தனி இணையதளம் ஏன் ஏற்படுத்தக் கூடாது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கவும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கவும் கோரி மதுரையைச் சேரந்த வெரோணிகா மேரி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:இந்த சிக்கலான நேரத்தைப் பயன்படுத்தி தனியார் மருத்துமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளதைவிட கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு வாங்க வேண்டிய கட்டணம் மற்றும் தனியார் மருத்துவமனையில் 50 சதவீத படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணைகள்முறையாக அமல்படுத்தப்படு கிறதா? இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படுவதை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?
அரசாணையை மீறி கரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார்செய்ய வேண்டும்? அரசாணையைமீறுவோர் மீது எந்த பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்? என்ன தண்டனை வழங்கப்படும்? அரசாணை சரியாக அமல்படுத் தப்படுகிறதா? இல்லையா என்பதை கண்காணிக்க வேண்டியது யார்?
உத்தரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் இருப்பதுபோல் தனியார் மருத்துவமனை கள், அவற்றில் உள்ள படுக்கை வசதி, சிகிச்சைக்கான கட்டணம் ஆகியவற்றை மக்களுக்கு தெரிவிக்க அரசே ஏன் தனியாக இணையதளத்தை ஏற்படுத்தக் கூடாது?
தமிழக முதல்வர் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில் எத்தனை பேர் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்? தமிழ்நாடு அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற விவரங்களை மத்திய,மாநில அரசுகள் மே 12-ல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர வில் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
க்ரைம்
21 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
4 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago