சிஏஏ சட்டம் குறித்து அதிமுகவுக்கு தெளிவுபடுத்துவோம் : பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தகவல்

By செய்திப்பிரிவு

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ)குறித்து அதிமுகவுக்கு குழப்பம் உள்ளது. அதை நாங்கள் தெளிவுபடுத்துவோம் என்று பாஜக தமிழகமேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றபாஜகவுக்கு, நீலகிரி மாவட்டம்உதகை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட வேட்பாளர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, உதகையில் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

அதிமுகவுக்கு குழப்பம்

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதிமுகவினரிடையே குழப்பம் உள்ளது. இதனால், அந்த சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே, குடியுரிமைதிருத்தச் சட்டம் குறித்து அதிமுகவுக்கு தெளிவுபடுத்துவோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

1 hour ago

மேலும்