சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் புகாரில் சிக்கியதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு ஏடிஜிபியாக உள்ள ஜெயந்த் முரளி, தமிழக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்துதான் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை காவலர் பயிற்சிகல்லூரி டிஜிபி கரண் சின்ஹா, அமலாக்கப் பிரிவு சிறப்பு டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள் ளார். அமலாக்கப் பிரிவு சிறப்பு டிஜிபி ஷகீல்அக்தர், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்பி கயல்விழி, திருவாரூர் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் இதற்கான உத்தரவை நேற்று வெளியிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்