அதிமுக கொடியை பயன்படுத்திய விவகாரம் சசிகலா மீது சட்ட நடவடிக்கை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

By செய்திப்பிரிவு

அதிமுக கொடியைப் பயன்படுத்திய சசிகலா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா கடந்த ஜன.27-ம் தேதி விடுதலையானார். அப்போது அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-ம் தேதி மருத்துவமனையில் இருந்து தனியார் விடுதிக்கு சென்றபோது, காரில் அதிமுக கொடியை பயன்படுத்தினார். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பிப்.8-ல் அவர் சென்னை வருவதாகஅறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று டிஜிபியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்பெங்களூருவில் இருந்து காரில் அதிமுககொடியுடன்தான் சசிகலா புறப்பட்டார். தமிழக எல்லையில் கொடியை அகற்றும்படி காவல் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த காரில் இருந்து இறங்கி, அதிமுகநிர்வாகியின் காரில் ஏறி சென்னைக்கு பயணித்தார். அந்த காரிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘சசிகலா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்