நிலம் வாங்கித் தருவதாக 12 லட்சம் பேரிடம் ரூ.1,100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.207 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’ என்ற நிறுவனம், நிலங்கள் வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேரிடம் இருந்து மாதத் தவணையில் பணம் வசூல் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் புகார்
முதலீடு முதிர்வு பெற்றபின்னரும், அந்நிறுவனம் கூறியபடி, நிலங்கள் வாங்கிக்கொடுக்கவில்லை. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீதுதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன.இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமும் (செபி), இந்நிறுவனம் இனிமேல் யாரிடம் இருந்தும் முதலீடுகளைப் பெறக் கூடாது என்றும், புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது என்றும் தடை விதித்தது. மேலும், இந்தமோசடி தொடர்பாக வந்தபுகார்களின்பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
4 பேர் மீது வழக்கு பதிவு
3,520 ஏக்கர் நிலம்
இந்த நிறுவனத்துக்கு சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 3,520 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை அமலாக்கத் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.207 கோடி ஆகும். ‘டிஸ்க் அஸட்ஸ் லீடு இந்தியா’ நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,137 கோடி வசூல் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
16 mins ago
விளையாட்டு
9 mins ago
தமிழகம்
36 mins ago
க்ரைம்
47 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago