10-வது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 செப்டம்பர் 25-ம் தேதி ஆணையம் அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டது. விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் இன்னும் விசாரணை முடியவில்லை.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டுபணியாளர்கள் உட்பட பலரிடம்விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதம் ஆவதால், ஆணையத்தின் விசாரணை கடந்த 24 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே 9 முறை நீட்டிக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் கடந்த 24-ம் தேதி முடிவடைய இருந்தது. இதையடுத்து, மேலும் 3 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், விசாரணை ஆணையத்தின் பதவிக் காலம் தற்போது 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

சுற்றுச்சூழல்

53 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்