அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் அறிவிப்புக்கு இணங்க, மொழிப்போராட்டத்தில் உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிமுக மாணவர் அணியின் சார்பில், ஜன.25-ம் தேதி அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்மாவட்ட தலைநகரங்களில்,‘ வீர வணக்கநாள் பொதுக்கூட்டங்கள்’ நடை பெற உள்ளன.
மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞரணி, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, வீர வணக்கநாள் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாகநடத்தி அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவொற்றியூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் முதல்வர் பழனிசாமி, வடசென்னை வடக்குகிழக்கு மாவட்டத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்டபகுதியில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago