தமிழகத்தில் புதிதாக 682 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 406, பெண்கள் 276 என மொத்தம் 682 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 26,943 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 8 லட்சத்து 7,744 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 869 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் 2 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4 என நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,228 ஆக உயர்ந்துள்ளது. 249 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 48 லட்சத்து 85,013 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 60,314 பரிசோதனைகள் செய் யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 mins ago
ஓடிடி களம்
7 mins ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
56 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago