புதிதாக 682 பேருக்கு கரோனா முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக 682 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 406, பெண்கள் 276 என மொத்தம் 682 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 26,943 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 8 லட்சத்து 7,744 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 869 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் 2 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4 என நேற்று 6 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,228 ஆக உயர்ந்துள்ளது. 249 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 48 லட்சத்து 85,013 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 60,314 பரிசோதனைகள் செய் யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 mins ago

ஓடிடி களம்

7 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்