கரோனா நோயாளி எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது புதிதாக 838 பேருக்கு தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. புதிதாக 838 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 518, பெண்கள் 320 என மொத்தம் 838 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 229 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 21,550 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 20,072 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 1,414 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 267 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 985 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என நேற்று 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,166 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,025 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 26,456, கோவையில் 52,649, செங்கல்பட்டில் 50,260, திருவள்ளூரில் 42,809 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 241 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 44 லட்சத்து 42,625 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 60,502 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

கல்வி

23 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்