புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் தேர்வாகி, சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை பெறுகிறது.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் புதுவை அரசு சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது வழங்குகிறது.
இதில், 2019-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபன் இயக்கி, தனி ஒருவராக நடித்த ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குநர் பார்த்திபனுக்கு முதல்வர் நாராயணசாமி வரும் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
உலகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
6 hours ago