புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி அரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் தேர்வாகி, சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை பெறுகிறது.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் புதுவை அரசு சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களைத் தேர்வு செய்து விருது வழங்குகிறது.

இதில், 2019-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபன் இயக்கி, தனி ஒருவராக நடித்த ‘ஒத்த செருப்பு’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இயக்குநர் பார்த்திபனுக்கு முதல்வர் நாராயணசாமி வரும் 15-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்