புதுச்சேரி ஆழ்கடலில் காணப்படும் அரிய வகை கொம்பு திருக்கை மீன்கள்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி கடல் பகுதியில் கூட்டமாக காணப்படும் அரிய வகை கொம்பு திருக்கை மீன்களை ஆழ்

கடல் நீச்சல் வீரர்கள் கண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஆழ்கடல் நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான அரவிந்தன் தலைமையில், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் 10 பேர், ஆழமான கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு அரியவகை கொம்பு திருக்கை மீன்களை அவர்கள் கண்டு அதை வீடியோ, படங்களாக எடுத்திருந்தனர். நேற்று அதை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அரவிந்தன் கூறும்போது, "நிவர் புயலுக்கு முன்பாக தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் 115 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருந்தோம். அப்போது அரிய வகை கொம்பு திருக்கை மீன்களை கண்டோம். 15 அடி அகலமும் ஆறடி உயரமும் கொண்ட மீன்களைக் கூட்டமாக முதல்முறையாக பார்த்தது பிரமிப்பாக இருந்தது.

கடந்த 12 ஆண்டுகளாக ஆழ்கடல் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறோம். புதுச்சேரி கடல் பகுதியில் இப்படி பார்ப்பது இதுவே முதன்முறை" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

32 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்